அவள் நாளை வருகிறாள்.
என் இதயம் முழுவதும் சந்தோஷச் சுனாமி! இதுவரை
உணராத ஒருவித தவிப்பு. இறக்கைகள் முளைத்தது போல்
புதுவகை சுறுசுறுப்பு.
அவள் வந்ததும் அப்படியே அலாக்காக தூக்கி ஒரு
சுற்று சுற்ற வேண்டும். கட்டி அணைத்து முத்தமிட்டு
கதை பேச வேண்டும். என் அன்பை முழுவதுமாய்
குத்தகை எடுத்த அவளுக்கு ஏராளம் வாங்கித்தர
பட்டியல் தயார்.
உறக்கமில்லாமல் கழிந்தது இரவு.
புதுப்பூவாய் புலர்ந்தது பொழுது.
அழைப்பு மணி ஒலித்தது.
ஆம்...வந்துவிட்டாள்....
என் அக்காவின் ஐந்து வயது அழகு மகள்!
[ தினமலரில் 22 -8 - 2010 ல்௦ வெளியானது]
Superb one
ReplyDeleteawesome mama
ReplyDeleteCute lil story.
ReplyDelete